மத்திய மாகாணம், பீரார் ஆகிய இருமாகாணங்களின் தொழிலாளர் கள் விவசாயிகள் கட்சி (The workers and Peasants' Party)யென்று சமதர்மத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு ஆரம்பிக்க முடிவு செய்யப்பட்டி ருக்கிறது. இதன் காரிய நிர்வாக கமிட்டி அங்கத்தினர்களாக பிரபல தொழிற் சங்கத் தலைவர்களும், சோஷியலிஸ்ட் தலைவர்களுமாக பலர் இருக்கின்ற னர். முக்கியமாக குறிப்பிடத்தக்க நாகபுரி தோழர் ஆர்.எஸ்.ராய்க்கர் எம்.ஏ.. எல்.எல்.பி. அவர்களும், அம்ரோதி பி.ஜி.தேஷ்பாண்டே அவர்களும் பெரிதும் இதில் அதிக ஊக்கமெடுத்து உழைக்கின்றார்கள். நமது சுயமரியாதை லட்சியத்தின் வெற்றிக்கு இதுவும் எடுத்துக் காட்டாகும்.
புரட்சி - செய்தி விளக்கம் - 17.12.1933